பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு - வீர மரணமடைந்த முஷ்டாக் அகமதுவின் உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள்
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூடு
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, ஸ்ரீநகரில், நாகா கட்சி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 போலீசார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தி விட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) முஷ்டாக் அகமது உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள்
தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த முஷ்டாக் அகமது உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் நிலைகுலைந்து கதறி அழுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்தி, வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ये चीखें सुनकर कलेजा फट रहा, ASI मुश्ताक अहमद की शहादत को नमन.🙏 pic.twitter.com/S6t5GpJTcX
— Utkarsh Singh (@UtkarshSingh_) July 13, 2022