முருகன் தமிழ்க் கடவுள் என்றால்.. அப்போ சிவன்? லாஜிக்கா கேட்டா.. திருமா
முருகன் தமிழ்க் கடவுள் என்றால், சிவனும் தமிழ்க் கடவுளாகத் தானே இருக்க முடியும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
சிவன் யார்?
சென்னையில் விசிக சார்பாக விருது விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது,
முருகன் தமிழ் கடவுள் என்றால், அவரது அப்பா சிவபெருமானும் தமிழ்க் கடவுளாகத் தானே இருக்க முடியும்.. முருகன் தமிழன் என்றால், சிவன் தமிழன் என்றால் பார்வதியும் தமிழச்சியாக தான் இருக்க வேண்டும்.
திருமா கேள்வி
அப்போ சிவனும், பார்வதியும் கைலாய மலையில் இருக்கிறார்கள் என்றால், கைலாயம் தமிழரின் தேசம்தானே?அப்போ ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர் தேசியம் தானே? எங்கள் தமிழன் சிவபெருமான் கைலாயத்தில் குடியிருக்கிறார் என்றால், கைலாய மலையும் தமிழனுக்கு சொந்தம்.
அப்போ இமயம் முதல் குமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவபெருமானே ஒரு சான்று. அந்த கதையின்படி பார்த்தால், சிவன் தமிழன். பார்வதி தமிழச்சி என்றால், மகன் கணபதி கணேசனும் தமிழனாக தானே இருக்க முடியும். அப்போது ஏன் கணேசனை யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்வதில்லை.
இதையெல்லாம் லாஜிக்காக கேட்டால் அவங்களுக்கு கோபம் வரும். இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. அதனால்தான் அதை அரசு மதமாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.