மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - நெஞ்சை பதைக்கும் கொடூரம்!

Maharashtra Fire Crime Accident
By Vidhya Senthil Oct 16, 2024 07:48 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 மும்பையில் ஏ.சி. எந்திரத்தின் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மும்பை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ரியல் பேலஸ் 14 அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.

fire accident

இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் இன்று காலை 8.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அங்கு வசித்து வந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

மனைவி கொலை வழக்கு .. ஜாமீனில் வந்த கணவர்- கடைசியில் நேர்ந்த கொடூரம்!

மனைவி கொலை வழக்கு .. ஜாமீனில் வந்த கணவர்- கடைசியில் நேர்ந்த கொடூரம்!

இந்த சம்பவம் குறித்து அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்கு மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயில் சிக்கியவர்களை மீட்டனர்.

 தீ விபத்து

மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

mumbai

இந்த தீவிபத்தில் தம்பதியான சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் பெலுபேட்டா (42) ஆகிய 3 பேரும் தீயில் கருகிப் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முதற்கட்ட விசாரணையில் ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இதில் ஏதாவது வேறு காரணம் உள்ளதா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.