பல பேங்க்கில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா?.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!
பேங்க் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் இதனை தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கி கணக்கு
தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைத்துமே மொபைல் மூலம் செய்துகொள்ளும் வசதி வந்துள்ளது. அதனால் வங்கி தொடர்பான விஷயங்களில் கூட அனைத்தையும் மொபைலில் செய்துகொள்ளலாம்.
இதில் வங்கியில் சேமிப்பு கணக்கை துவங்குவதற்கு தற்போது தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் அல்லது மொபைல் ஆப்ஸ் மூலம் மக்கள் ஒரு வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை எளிதாக ஓபன் செய்து கொள்கிறார்கள்.
இதனால் மக்கள் பல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துக்கொள்கின்றனர். மேலும், பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது நல்லது என்று தோன்றினாலும் அதிலும் சில தீமைகள் உள்ளது.
பல கணக்குகள்
இந்நிலையில், பல வங்கி கணக்குகள் வைத்திருந்தாலும் அவை ஒவ்வொன்றிலும் மினிமம் பேலன்ஸ் தொகையை பராமரிக்க வேண்டும். சர்விஸ் மற்றும் உங்களது அக்கவுண்ட்டை மெயின்டையின் செய்யும் செலவை கருத்தில் கொண்டு, நீங்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத போது குறிப்பிட்ட அளவு அபராத கட்டணங்களை வங்கிகள் விதிக்க கூடும்.
பல பேங்க் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருக்கலாம் என்றாலும், சில அக்கவுண்ட்டை நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலற்ற அக்கவுண்டாக (Dormant account) வங்கியால் குறிப்பிடப்படும்.
கணக்கை செயலற்ற நிலையில் தொடர்ந்து வைத்திருப்பது பல கட்டணங்களை ஈர்க்கலாம். கடைசியில் இது உங்கள் அக்கவுண்டின் பேலன்ஸ் தேவையின்றி குறையும். பலர் இந்த கட்டணங்கள் குறித்து அறியமாட்டார்கள், இது குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கண்காணித்து வரவேண்டும்.