இதுதான் ட்விஸ்ட்டே.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கேவின் முக்கிய பதவியில் தோனி - யாருமே எதிர்பார்க்கல..
தோனி ஓய்வு பெற்ற பின், முக்கிய பதவிக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
தோனி ஓய்வு
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனி மற்றும் பயிற்சியாளர் பிளெமிங் எடுக்கும் முடிவுகள் தான் இறுதியானது.
இதற்கிடையில், தோனி இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சிஇஓ
அதனைத் தொடர்ந்து, ஓய்வுக்கு பின் ஒவ்வொரு சீசனின் போது தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
தற்போது சிஎஸ்கே அணியின் சிஇஓ-வாக காசி விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார். தோனியை அந்த பொறுப்புக்கு கொண்டு வர சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் வீரர்களுக்கான ஏலம் தொடங்கி அத்தனை செயல்பாடுகளிலும் அவரால் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.