IPL தொடரில் முதல் முறை; தோனிக்கு நேர்ந்த சோகம் - சொதப்பலில் முடிந்த முயற்சி!

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath May 02, 2024 03:13 AM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

சென்னை - பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

IPL தொடரில் முதல் முறை; தோனிக்கு நேர்ந்த சோகம் - சொதப்பலில் முடிந்த முயற்சி! | Ms Dhoni Out For The First Time This Ipl Season

இதனையடுத்து 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

T20 World Cup: ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பில்லை - பாரபட்சம் காட்டும் பிசிசிஐ?

T20 World Cup: ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பில்லை - பாரபட்சம் காட்டும் பிசிசிஐ?

எம்.எஸ். தோனி 

இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் செய்தபோது 18-வது ஓவரில் எம்.எஸ்.தோனி களமிறங்கினார். அவர் 11 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தில் தோனி 2 ரன்கள் ஓட முயற்சித்து ரன்-அவுட் ஆனார்.

IPL தொடரில் முதல் முறை; தோனிக்கு நேர்ந்த சோகம் - சொதப்பலில் முடிந்த முயற்சி! | Ms Dhoni Out For The First Time This Ipl Season

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.