அந்த சீன் அப்போ - ரொம்ப பயந்தேன் - நடிக்க முடியாது'னு சொன்னேன் - ஆனாலும்!! வருத்தப்படும் மிருணாள்

Vijay Deverakonda Nani Mrunal Thakur
By Karthick Apr 28, 2024 06:34 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து தற்போது இந்திய சினிமாவில் நாயகியாக பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் மிருணாள் தாக்கூர்.

மிருணாள் தாக்கூர்

தமிழில் வெளியான "சீதா ராமம்" படம் பெரும் வரவேற்பை பெற்றது.அப்படத்தில் நடித்த நாயகி மிருணாள் தாக்கூர் ஒரே படத்தில் தமிழக ரசிகர்களை கொள்ளைகொண்டார். தமிழை தாண்டி இவர் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

mrunal-thakur-kissing-scenes-in-movies-dont-want

தெலுங்கில் நானியுடன் " ஹாய் நானா", விஜய் தேவரக்கொண்டாவுடன் "பேமிலி ஸ்டார்" போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்தார் மிருணாள் தாக்கூர். ஹிந்தியிலும் ஹ்ரித்திக் ரோஷன், அக்ஷய் குமாருடன் ஜோடியாக நடித்துள்ளார் மிருணாள் தாக்கூர்.

mrunal-thakur-kissing-scenes-in-movies-dont-want

சீதா ராமம் படத்தில் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர், கிளாமராக நடிப்பதிலும் தயக்கம் காட்டுவதில்லை. ஹிந்தியில் வெளியான வெப் தொடரான "லஸ்ட் ஸ்டோரீஸ் 2" தொடரிலும் நெருக்கமாக நடித்துள்ளார். அண்மையில் வெளியான பேமிலி ஸ்டார் படத்திலும் முத்த காட்சியில் நடித்திருந்தார் மிருணாள் தாக்கூர்.

முத்தக்காட்சிக்கு நோ

அண்மையில் இவர் அளித்த பேட்டியில், தான் முத்த காட்சிக்கு நோ சொன்னதால், நிறைய படவாய்ப்புகள் தவறியதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை விரும்பியதில்லை, எனது பெற்றோரும் ஏற்க மாட்டார்கள்.

mrunal-thakur-kissing-scenes-in-movies-dont-want

அதன் காரணமாக பல படங்களை மறுத்தேன். ஆனால், நடிகராக அதற்கு தயாராக வேண்டும், சில நேரங்களில் படத்திற்கு அப்படியான காட்சிகள் அவசியமானதாக இருக்கும்.

திருமணமான அந்த நடிகர் தான் எனக்கு எல்லாமே - முதல் முறையாக போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்

திருமணமான அந்த நடிகர் தான் எனக்கு எல்லாமே - முதல் முறையாக போட்டுடைத்த மிருணாள் தாக்கூர்

இருப்பினும், முத்தக்காட்சியில் நடிக்க நோ சொன்னதால், நிறைய பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க பயப்படுவேன்.

mrunal-thakur-kissing-scenes-in-movies-dont-want

அது போன்ற காட்சி வேண்டாம் என்றும் கூறுவேன். பெற்றோருடன் படம் பார்க்கும் போது, அது போன்ற காட்சிகள் வந்தால், தர்ம சங்கடமாக இருக்கும். , அதனாலேயே அப்படிப்பட கதைக்கு ஒகே சொல்வது இல்லை என அப்பேட்டியில் அவர் கூறியுள்ளார்.