செங்கோலை பற்றி பேசும் பாஜகவிற்கு அதன் வரலாறு தெரியுமா? - எம்.பி.கனிமொழி சரமாரியாக கேள்வி!
திமுக எம்.பி.கனிமொழி மக்களவையில் பாஜக குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுமையாக நடக்கவில்லை. மணிப்பூர் விவாகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர் காட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.
நேற்று 2-வது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அதில் "உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்?" என்றார்.
செங்கோல் குறித்து
இடைநி தொடர்ந்து, அவர் பேசுகையில், "கண்ணகியின் கோபத்தால் பாண்டிய மன்னன் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா? பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையிலிருந்து வந்ததாக சொன்னீர்கள்.
கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் உள்ளது. ஹத்ராஸ், கத்துவா, உன்னாவ், பில்கிஸ் பானு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆகியவை நடந்தபோது அமைதியாக இருந்தவர்களை இந்தியாவின் தாய்மார்கள் தண்டிப்பார்கள்" என்று கூறியுள்ளனர்.