திமுக எம்.பி கனிமொழி உட்பட 11 பேர் சஸ்பெண்ட்...!
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடரில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, என்.வி.என்.சோமு, சண்முகம், கிரிராஜன் உட்பட 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது.
இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
இந்நிலையில், இன்று நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, டிஎம்சி எம்பிக்கள் சுஷ்மிதா தேவ், டாக்டர் சாந்தனு சென், டோலா சென், மவுசும் நூர், சாந்தா செத்ரி, நதிமுல் ஹக் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்ற துணைத் தலைவர் சஸ்பெண்ட் செய்தார்.
அதேபோல், கனிமொழி, எவிஎன் சோமு, சண்முகம், என்.ஆர், இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை திமுக எம்பிக்களான 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இசஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விதி எண் 256ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.