103 வயதில் 3வது திருமணம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர் - குவியும் வாழ்த்துக்கள்!

Marriage Madhya Pradesh
By Sumathi Jan 30, 2024 09:48 AM GMT
Report

 103 வயதில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் 3வது திருமணம் செய்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் 

மத்தியப் பிரதேசம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப் நாசர் (103). சுதந்திர போராட்ட வீரராக இருந்தவர். முதல் மற்றும் இரண்டாவது மனைவிகள் காலமான நிலையில் தனியாக வசித்து வருகிறார்.

ஹபீப் நாசர் - ஃபிரோஸ் ஜஹான்

மேலும், தன்னைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், ஃபிரோஸ் ஜஹான்(49) என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில்,

69 வயதில் 3வது திருமணம் - 24 வயது குறைவான பெண்ணை கரம்பிடித்த பிரபலம்!

69 வயதில் 3வது திருமணம் - 24 வயது குறைவான பெண்ணை கரம்பிடித்த பிரபலம்!

3வது திருமணம் 

தற்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் பலர் வாழ்த்திக்களை தெரிவித்து வருகின்றனர். ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணம். கணவர் காலமான நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த திருமணம் குறித்து அவர் கூறுகையில், கணவர் ஹபீப் நாசர் நலமுடன் இருக்கிறார். எந்த வித மருத்துவ பிரச்சினையும் இல்லை. இவரை திருமணம் செய்து கொள்ள தன்னை யாரும் வற்புறுத்தவில்லை. தானாக விரும்பியே அவரை திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.