வாய் பேச முடியாத குழந்தை; முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்- என்ன நடந்தது?

Karnataka India Crime Death
By Jiyath May 07, 2024 05:50 AM GMT
Report

பெற்ற தாயே தனது மகனை ஆற்றில் வீசிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொடூர தாய் 

கர்நாடக மாநிலம் தண்டேலி அருகே ஹலமாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரவிக்குமார் - சாவித்ரி. இந்த தம்பதியின் வினோத் என்ற 6 வயது மகன் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார்.

வாய் பேச முடியாத குழந்தை; முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்- என்ன நடந்தது? | Mother Throws Son Into Crocodile Infested River

இதனால் மகனின் வாய்பேசாத நிலை குறித்து கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சாவித்ரி தனது மகன் வினோத்தை அருகில் உள்ள முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசியுள்ளார்.

இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை!

இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை!

பெற்றோர் கைது 

இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை கால்வாயில் தேடியுள்ளார். மேலும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அங்கு வந்த மீட்புக் குழுவினர் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அதிகாரிகள் சிறுவனை தேடினர்.

வாய் பேச முடியாத குழந்தை; முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்- என்ன நடந்தது? | Mother Throws Son Into Crocodile Infested River

இதனையடுத்து அடுத்த நாள் காலையில் சிறுவனின் உடல் பாகங்களை கண்டெடுத்தனர். சிறுவனின் உடலில் பல இடங்களை முதலைகள் கடித்துக் குதறி, ஒரு கையை துண்டித்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.