சொந்த மகனையே 8 ஆண்டுகள் வீட்டிற்குள் அடைத்து வைத்து சீரழித்த தாய் - அதிர்ச்சி சம்பவம்!

United States of America Sexual harassment
By Vinothini Jul 07, 2023 10:07 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

அமெரிக்காவில் ஒருவர் தனது சொந்த மகனை 8 ஆண்டுகளாக வீட்டிற்குள் வைத்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன சிறுவன்

அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தில் 25 வயதான ரூடி ஃபரியாஸ் என்பவர் 2015-ல் 17 வயதாக இருக்கும்போது காணாமல் போனதாகக் கூறப்பட்டது. திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அவர் ஆர்வலர் குவானெலிடம், தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.

mother-sexually-harassed-her-child

அதில் அவர் தான் காணாமல் போகவில்லை என்றும் இவ்வளவு ஆண்டுகளாக அவரது தாய் வீட்டிற்குள் அடைத்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞர்

இந்நிலையில், அவர் பேசுகையில், ரூடியின் தாய் அவரை தன் கணவராக இருக்க வற்புறத்தியிருக்கிறார். ஒரு அடிமையைப் போல வாழ்ந்து சோர்வானதால் 2015-ல் வீட்டை விட்டு ஓடிப்போய் பிறகு 2 நாட்களில் திரும்பி வந்த்துள்ளார். ஆனால் இவரது தாயார் அவனிடம் ஏதாவது வெளியில் சொன்னால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறி அச்சுறுத்தியிருக்கிறார்.

mother-sexually-harassed-her-child

மேலும், இவரது தாயின் கணவரை போல் இருக்க கூறி அவரை படுக்க வைத்துள்ளார். அவர் அதனை விரும்பாமல் படுக்கைக்கு அடியில் சென்று ஒளிந்துகொள்வார் என்றும் தனக்கு போதை மருந்துகள் அளித்துள்ளார் என்றும் கூறினார். அதன்பிறகு, அந்த சிறுவனை ஒரு சிறந்த போதை மறுவாழ்வு இல்லத்திற்கும், நல்ல மனநல காப்பகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று அந்த ஆர்வலர் கூறியுள்ளார்.