தவிக்கும் கணவன் - இன்ஸ்டாகிராம் காதலனுடன் மனைவி செய்த காரியம்!

Tamil nadu Salem
By Jiyath Apr 23, 2024 04:35 AM GMT
Report

2 குழந்தைகளை தவிக்க இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராம் 

சேலம் மாவட்டம் கிழக்கூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்த்தி (29) - சுதர்சனா (28). காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே சுதர்சனா இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

தவிக்கும் கணவன் - இன்ஸ்டாகிராம் காதலனுடன் மனைவி செய்த காரியம்! | Mother Running Away With Her Instagram Boyfriend

இதனை அவரது கார்த்திக் கண்டித்துள்ளார். ஆனாலும் சுதர்சனா இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அதிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

லண்டனுக்கு சென்ற மனைவி; காவலர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது?

லண்டனுக்கு சென்ற மனைவி; காவலர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது?

மனைவி ஓட்டம் 

இதனிடையே 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு, திடீரென அவர் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது கணவர் கார்த்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

தவிக்கும் கணவன் - இன்ஸ்டாகிராம் காதலனுடன் மனைவி செய்த காரியம்! | Mother Running Away With Her Instagram Boyfriend

அதில், இன்ஸ்டாகிராம் காதலனுடன் சுதர்சனா ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. மேலும், அந்த நபர் மேச்சேரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் சுதர்சனாவையும் அவரது இன்ஸ்டாகிராம் காதலனையும் தேடிவருகின்றனர்.