காதல் திருமணம் செய்த மகன், தாயை வெட்டிக் கொன்ற தந்தை - உயிருக்கு போராடும் மருமகள்!

Tamil nadu Attempted Murder Crime
By Sumathi Apr 15, 2023 09:33 AM GMT
Report

காதல் திருமணம் செய்த மகனை, தந்தை ஆணவக்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதல் திருமணம்

கிருஷ்ணகிரி, அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணியின் மகன் சுபாஷ் (25). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றிவந்தார். அங்கு தன்னுடன் வேலை செய்துவந்த அனுஷா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

காதல் திருமணம் செய்த மகன், தாயை வெட்டிக் கொன்ற தந்தை - உயிருக்கு போராடும் மருமகள்! | Love Marriage Krishnagiri Son Killed By Father

இந்நிலையில், தந்தை எதிர்த்த போதிலும், மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அனுஷாவை மகன் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, சொந்த ஊருக்கு வந்த இருவரும் பாட்டி கண்ணம்மா வீட்டில் தங்கியுள்ளனர்.

ஆணவக்கொலை 

இதுகுறித்து அறிந்த தந்தை அங்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகனும், தாயும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த அனுஷா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனையடுத்து தலைமறைவாக உள்ள தண்டபானியை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.