தாயை கொலை செய்து, தங்கையை ரூமில் அடைத்து, ஹாலில் உணவு சாப்பிட்ட மகன்.... - நெஞ்சம் பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்

Attempted Murder
By Nandhini Jun 09, 2022 05:37 AM GMT
Report

தாயை கொலை செய்து, தங்கையை ரூமில் அடைத்து 2 நாட்களாக உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பப்ஜி விளையாட்டு

உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி, தன்னுடைய மகன் (16) , மகள் (10) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கணவர் ராணுவ அதிகாரி என்பதால் அவர் மேற்குவங்கத்தில் பணிபுரிந்து வந்தார். மகன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மகனுக்கு பப்ஜி விளையாட்டு அவ்வளவு விருப்பம். இதனால், பப்ஜி விளையாட்டிற்கு அவன் அடிமையாகி கிடந்தான். பள்ளி நிர்வாகம் கடந்த வாரம் பெற்றோரை அழைத்து, உங்கள் மகன் படிப்பில் நாட்டமில்லாமல் இருக்கிறான் என்று திட்டியுள்ளனர். இதனால், தாய் மகனுக்கு பப்ஜி விளையாட செல்போன் கொடுக்க மறுத்து வந்துள்ளார்.

தாய் கொலை

இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு அச்சிறுவன் சென்றிருக்கிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் யாருக்கும் தெரியாமல் செல்போனை எடுத்து பப்ஜி விளையாடியிருக்கிறான். இதைப் பார்த்த தாய் மகனை கண்டித்திருக்கிறார். உடனே, அவனை திட்டி செல்போனை பிடுங்கியிருக்கிறார். மகன் செல்போனை தரும்படி கூற, தாய் கண்டிப்பாக மறுத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அச்சிறுவன் பீரோவில் வைத்திருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து தாயாரை பட்... பட்... என சுட்டான். சம்பவ இடத்திலேயே தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

உணவு சாப்பிட்ட மகன்

இதைப் பார்த்து 10 வயது மகள் அதிர்ச்சியில் உறைந்து பயத்தால் நடுங்கியிருக்கிறாள். உடனே, தன் தங்கை அழைத்து, ஒரு அறைக்குள் கொண்டுபோய் விட்டு சத்தம் எதுவும் போடக்கூடாது என்று மிரட்டி பூட்டி வைத்துள்ளான். இறந்த தாயின் உடலை இன்னொரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, ஹாலில் உட்கார்ந்து நண்பர்களுக்கு போனில் பேசிக்கொண்டு பப்ஜி விளையாடிக்கொண்டிருக்கிறான். பின்னர், முட்டை குழம்பு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு நண்பர்களுடன் நகைச்சுவை படம் பார்த்துள்ளான்.

தாயை கொலை செய்து, தங்கையை ரூமில் அடைத்து, ஹாலில் உணவு சாப்பிட்ட மகன்.... - நெஞ்சம் பதற வைத்த அதிர்ச்சி சம்பவம் | Mother Murder Son Arrest Tragic Incident

போலீஸ் விசாரணை

2 நாட்கள் ஆன நிலையில், இறந்த தாயின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக வாசனை திரவியத்தை தெளித்துள்ளான் அச்சிறுவன். ஆனால், துர்நாற்றம் அதிகமாக வீச அக்க, பக்கத்தினர் சந்தேகப்பட்டனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, அப்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் கதறல்

10 வயது சிறுமியை மீட்டு, தந்தையான ராணுவ அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலைக் கேட்ட தந்தையும், அப்பெண்ணின் கணவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். குடும்பத்தின் பாதுகாப்பிற்காகத் தான் துப்பாக்கியை பீரோவில் வைத்தேன். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.