தனியாக விட்டு வெக்கேஷன் சென்ற தாய்; 16 மாத குழந்தை உயிரிழப்பு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

United States of America Death
By Swetha Feb 26, 2024 11:17 AM GMT
Report

16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டு தாய் வெக்கேஷன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் கொடூரச் செயல் 

அமெரிக்கா, ஓஹியோ நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டெல் கேண்டலேரியோ(31). இவருக்கு ஜெயின் என்ற 16 மாதக் குழந்தை இருந்துள்ளது.

kristel candelario

இந்நிலையில், அந்த குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு போர்ட்டோ ரிக்கோ மற்றும் டெட்ராய்ட் ஆகிய நகரங்களுக்கு இப்பெண் விடுமுறைக்கு 10 நாட்களுக்கு சென்றுள்ளார். அந்த குழந்தையை கவனித்துகொள்ள யாரையும் நியமிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

வெக்கேஷன் முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டில் அந்தக்குழந்தை சுயநினைவின்றி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து  911 உதவி எண்ணை அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்களின் மெத்தனமே காரணம்..தாய் கதறல்..!

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - மருத்துவர்களின் மெத்தனமே காரணம்..தாய் கதறல்..!

குழந்தை பலி

அதில் அண்டை வீட்டார் ‘கேண்டலேரியோ தன்னுடைய குழந்தையை வீட்டில் தனியாக விட்டுப்போவது இது முதல்முறையல்ல. நாங்களும், சுற்றியுள்ளவர்களும், குழந்தையை இப்படி தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம். ஆனால் அவர் எப்போதும் குழந்தையைத் தனியாகவே விட்டுச் செல்வார்’என்றனர். 

[

 தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.