3 வருட காதல் - மருமகளை திருமணம் செய்த மாமியார்

Bihar
By Karthikraja Aug 13, 2024 01:07 PM GMT
Report

 மாமியார் சொந்த மருமகளையே திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாமியார் மருமகள்

மாமியார் மருமகள் என்றாலே பெரும்பாலும் எதிர் எதிர் துருவங்களாக இருப்பது போல் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கு மாமியார் மருமகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

mother in law married daughter in law

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த சுமன் என்ற பெண், தன்னுடைய சொந்த மருமகள் ஷோபாவை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் தனியாக இருந்த போது உடல் ரீதியாக நெருக்கமாக இருந்துள்ளனர். 

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

கோவிலில் திருமணம்

இது இவர்களது கணவர்களுக்கு தெரியவந்து கண்டித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு ஓடி சென்று அங்குள்ள உள்ளூர் ஆலயத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளிக்கிறார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி காட்டினார். இருவரும் அங்குள்ள நெருப்பை சுற்றி வந்து அக்னிசாட்சியாக எப்போதும் ஒன்றாக இருப்போம் என உறுதி ஏற்றனர்.

ஆழமான காதல்

இந்த திருமணம் குறித்து பேசியமாமியார் சுமன், நான் எனது மருமகளை ஆழமாக காதலிக்கிறேன். அவள் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். என கூறினார். 

இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த ஜோடிக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.