வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார் - மருமகள் எடுத்த அந்த முடிவு

Marriage Bihar Divorce
By Sumathi Jun 11, 2025 11:18 AM GMT
Report

மாமியார் தன்னிடம் கிட்னியை வரதட்சனையாக கேட்பதாக மருமகள் புகாரளித்துள்ளார்.

வரதட்சனை கொடுமை

பீகார், முஷாபர்பூர் நகரைச் சேர்ந்தவர் தீப்தி. இவருக்கு கடந்த 2021ல் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார் - மருமகள் எடுத்த அந்த முடிவு | Mother In Law Demanded Kidney As Dowry Bihar

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தீப்தியிடம், வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் பைக், பணம் கொடுக்காவிட்டால் உனது கிட்னிகளில் ஒன்றை தானமாக கொடு என்று கேட்டுள்ளார்.

குங்குமம் வைக்கும்போது நடுங்கிய மணமகனின் கை - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

குங்குமம் வைக்கும்போது நடுங்கிய மணமகனின் கை - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மாமியார் கைது

ஏனென்றால், தீப்தியின் கணவருக்கு திருமணத்துக்கு முன்பே கிட்னி பாதிப்பு இருந்துள்ளது. அதை மறைத்து திருமணம் செய்து வைத்தது, அப்போதுதான் தெரியவந்துள்ளது. மேலும், மாமியார் தீப்தியை மன ரீதியதாகவும், உடல் ரீதியதாகவும் தாக்கியதாக கூறப்படுகிறது.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார் - மருமகள் எடுத்த அந்த முடிவு | Mother In Law Demanded Kidney As Dowry Bihar

அதற்கு தீப்தி மறுப்பு தெரிவித்ததால், அடித்து வீட்டை வீட்டு வெளியேற்றியுள்ளனர். எனவே, தீப்தி போலீஸில் புகாரளித்துள்ளார். தனக்கு விவகாரத்து வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து மாமியார், கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.