மாமனாருடன் ஓடிப்போன மணமகனின் தாய் - காதலிப்பதாக பகீர் வாக்குமூலம்!
மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகளின் தந்தையுடன், தாய் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தியுடன் காதல்
மத்தியப் பிரதேசம், உன்ட்வாஸ் கிராமத்தை சேர்ந்த 45 வயதுப் பெண்ணின் மகனுக்கும், 50 வயதுடைய நபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக மணமகனின் தாய்க்கும், மணமகளின் தந்தைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென தாய் காணாமல் போகவே, குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
பதறிய குடும்பம்
விசாரணையில், அப்பெண் தனது மகனுக்கு சம்பந்தி ஆகவிருந்தவருடன் விருப்பப்பட்டு ஓடிப்போனது தெரியவந்தது.

மேலும், இருவரும், தாங்கள் காதலிப்பதாகவும், ஒன்றாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்ப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துர்நாற்றம் வீசும் பெட்டிகள் - துருப்பிடித்த கழிவறைகள்: திருகோணமலை - கல் ஓயா தொடருந்து சேவையின் மோசமான நிலை IBC Tamil
ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்...! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை IBC Tamil