தாயை இழந்த நாய் குட்டிகளை அரவணைக்கும் கோழி ! நெகிழ்ச்சி சம்பவம்
animal
bird
lion
By Jon
4 years ago

Jon
in பொழுதுபோக்கு
Report
Report this article
தாயை இழந்த குட்டி நாய்களை கோழி ஒன்று அரவணைத்து பாதுகாக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது வீட்டில் அழகிய நாய்க்குட்டி ஒன்றும், கோழிகளையும் வளர்ந்து வந்தார். இந்நிலையில், நாய்க்குட்டி 5 குட்டிகளை ஈன்றது.
ஆனால் குட்டிகளை பிரசவித்த நாய் 10 நாட்களுக்குள் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. கண்களை கூட திறக்காத அந்த நாய் குட்டிகள், தற்போது அவர் வீட்டில் அங்கும் இங்குமாக சுற்றி வந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஜெகன் தவித்திருக்கிறார்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், வீட்டில் வளர்ந்த கோழி நாய் குட்டிகளை அரவணைத்து பாதுகாத்து வருகிறது. மேலும், மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் வியந்தனர்.
