பிணவறையில் பெண்கள் உடலை மோசமாக படம் எடுத்த நபர் - பகீர் சம்பவம்!

Karnataka Crime
By Sumathi Nov 14, 2022 10:43 AM GMT
Report

பெண் சடலங்களை நிர்வாணமாக ஊழியர் படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் சடலம்

கர்நாடகா, மடிக்கேரி என்ற பகுதியில் அரசு மருத்துவமனி உள்ளது. இங்கு, கடகதாலு பகுதியைச் சேர்ந்த சையத் ஹூசைன்(30) என்பவர் கொரோனா முன்கள பணியாளராக சேர்ந்தார். அங்கு பிணவறையில் ஊழியராக இருந்துள்ளார்.

பிணவறையில் பெண்கள் உடலை மோசமாக படம் எடுத்த நபர் - பகீர் சம்பவம்! | Mortuary Staff For Taking Nude Photos Of Women

இந்நிலையில் அவர் தன்னுடன் பணிபுரியும் பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை சரமாரியாக தாக்கி போலீஸில் ஒப்படைத்துள்ளனர். கைதான ஊழியர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஊழியர் கொடூரம்

தொடர்ந்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஆய்வு செய்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில், தான் வேலைப் பார்த்த பிணவறையில் பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.

மேலும், அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் நட்பாக பழகி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அதனையடுத்து தலைமறைவாக உள்ள சையத்தை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.