குலை நடுங்க வைத்த பேரிடர்; 2 ஆயிரத்தை தாண்டிய பலி - உச்சகட்ட சோகம்!
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,122-ஐ கடந்துள்ளது.
நிலநடுக்கம்
அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ உள்ளது. அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
2000 பேர் பலி
ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும், தொடர்ந்து பல நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,122-ஐ கடந்துள்ளது.
மேலும் 2300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களும் சேதமடைந்தன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.