நிலநடுக்கத்தில் தன் உடலால் மகனை மூடி காப்பாற்றிய தந்தை - மண்ணோடு புதைந்த வீடியோ வைரல்...!
துருக்கி நிலநடுக்கத்தில், தன் உடலால் மகனை மூடி காப்பாற்றிய தந்தை மண்ணோடு புதைந்து உயிரிழந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கி நிலநடுக்கம்
கடந்த திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது இரு நாடுகளிலும் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா முழுவதும் உள்ள நகரங்களில் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 1939ம் ஆண்டுக்குப் பின் துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
தன் உடலால் மகனை மூடி காப்பாற்றிய தந்தை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளை சிக்கிக்கொண்டவர்களை மீட்புக்குழுவினர் இடிபாடுகளிலிருந்து மீட்டுக்கொண்டு வருகின்றனர். துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஒரு தந்தை தனது மகனை தன் உடலால் மூடிய தருணத்தில் அவர் மேல் கட்டிடம் இடிந்து விழுந்தது.
மீட்புக்குழுவினர் மண்ணோடு புதைந்த அந்த தந்தையை இடிபாடுகளிலிருந்து வெளியே எடுக்கும்போது, தந்தையை அணைத்துக் கொண்டிருந்த குழந்தை உயிரோடு இருந்துள்ளார். உடனே, மீட்புக்குழுவினர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தன் உயிரை கொடுத்து மகன் உயிரை காப்பாற்றிய தந்தையின் வீடியோவைப் பார்த்த உலக மக்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கிறது.