உலகிலேயே முதன்முறையாக மனிதக் குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி

covid vaccine monkey
By Jon Mar 06, 2021 10:30 AM GMT
Report

உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் மனிதக் குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரத்தில் அமைந்துள்ள பிரபல மிருக்காட்சிசாலையில் 9 பெரிய குரங்குகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதில் 4 ஒராங்குட்டான் இனக் குரங்குகள் மற்றும் மீதமுள்ள 5 bonobo இனத்தைச் சேர்ந்த குரங்குகள் ஆகும்.

அவை அனைத்தும் தலா 2 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜனவரி மாதம் இந்த மிருகக்காட்சிசாலையில் மனித ஊழியர்களிடமிருந்து 8 கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்ததை அடுத்து, இந்த தடுப்பூசிகள் மேற்கொள்ளப்பட்டன.

கால்நடை மருந்து நிறுவனம் பிரத்தியேகமாக தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசியை சோதனை முறையில் இந்தக் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முன்பு பூனைகள் மற்றும் நாய்கள் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.