ipl கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த மோகித் சர்மா - ரசிகர்கள் அதிருப்தி!
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை குஜராத் வீரர் மோகித் சர்மா படைத்துள்ளார்.
மோசமான சாதனை
இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தொடர் சற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று 40வது லீக் போட்டியான டெல்லி கேப்பிட்டல் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நிகழ்ந்த இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்ள் மட்டும் இழந்து 224 ரன்களை குவித்தனர்.
மோகித் சர்மா
இந்த இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் மட்டும் எடுத்தது. டெல்லி அணியில் ராசிக் சலாம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில், இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர், 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட்டை கூட அவரால் வீழ்த்த முடியாமல் திணறினார்.
ஆகையால் இதுவே ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.இதனால் அவர் பல கிரிக்கெட் ரசிகர்களின் விமரிசனத்துக்கு ஆளாகியுள்ளார்.5 வயதான மோகித் சர்மா, இதுவரை 108 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 129 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.