மனிதகுலத்திற்கே எதிரானது பயங்கரவாதம்!! ஒன்றிணைத்து போராடவேண்டும் - பிரதமர் மோடி
பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் உரை
புதுடெல்லியி ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களுக்கான பி 20 எனப்படும் 9-வது உச்சிமாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டை துவங்கி வைத்த பிறகு நிகழ்ச்சியில் உறையற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இம்மாநாடு உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற நடைமுறைகளின் மகாகும்ப மேளாவைப் போன்று உள்ளது என்று இந்தியா நிலவில் தரையிறங்கி உள்ளது போல ஜி 20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உள்ளது என்று பெருமிதம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக இன்று பி20 உச்சிமாநாடு தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைச் சேர்ந்த மக்களின் சக்திதான் இந்த மாநாட்டிற்கு மிக முக்கிய காரணம் என சுட்டிக்காட்டி பேசிய அவர், இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது பெருமைக்குரியது என்று கூறினார்.
ஜனநாயகத்தின் தாய்
இந்தியா இந்தியா ஜனநாயகத்தின் தாய் என மாநாட்டில் குறிப்பிட்ட பிரதமர் மோடி உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியா என்றும் விவாதிப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஏற்ற இடமாக உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றங்கள் திகழ்கின்றன என குறிப்பிட்டார்.
உலகின் மிகப் பெரிய தேர்தலை இந்தியா நடத்துகிறது என பெருமிதம் கூறிய அவர், பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது என கண்டனம் தெரிவித்து பயங்கரவாதக் குழுக்கள் மாற்றுப் பாதையில் மனித நேய அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும்" எனத் தெரிவித்தார்.