ரோடு ஷோ; தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - முக்கிய சாலைகளில் ஏற்படும் மாற்றம்!
பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் காட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.
2 நாள் பயணமாக இன்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவர்,பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை சாலை பேரணியில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
ரோடு ஷோ
பிரதமரின் வருகைக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமரின் ரோடு ஷோ நடைபெறும் இடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், தியாகராய நகர் சாலை, வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலையில் ஆகிய பிரதான பகுதிகளில் பேரணி நடைபெறுகையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளனர். அதே போல சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளனர்.
இதையடுத்து, சென்னையில் பிரசாரத்தை மேற்கொண்ட பின், நாளை வேலூர் மற்றும் நீலகிரியிலும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.