மோடி மைதானத்தில் நடந்து வரும் விந்தையான டெஸ்ட்:வெற்றியின் விளிம்பில் இந்தியா

england rohit virat
By Jon Feb 26, 2021 07:09 AM GMT
Report

மோடி மைதானத்தில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் சரிந்துள்ளன இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.

அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார். அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.