சுதந்திரதினத்தில் வீடுகளில் கொடி ஏற்றுங்கள், தாய் மண்ணை எடுத்து செல்ஃ பி அனுப்பவேண்டும் - பிரதமர் மோடி!

Independence Day Narendra Modi India
By Vinothini Jul 31, 2023 04:17 AM GMT
Report

பிரதமர் மோடி சுதந்திர தினத்தில் கொடி ஏற்ற வேண்டும் மற்றும் செல்ஃ பி அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

மோடியின் உரை

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 103வது பதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

modi-announced-to-hoist-the-flag-in-house

அப்பொழுது அவர் கூறுகையில், "நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார். அந்த இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம் சிறப்பாக செயலாற்றியதாகவும், கூட்டு முயற்சியால் மீண்டு வந்துள்ளது" என்று கூறினார்.

சுதந்திர தினத்தில்

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "சுதந்திர தினத்துக்கு முன்பு “ என் தாய் என் தேசம்” என்ற மிகப்பெரிய பிரசாரம் தொடங்கப்படும். நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் இப்பிரச்சாரம் நடத்தப்படும் என்றார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அனைவரும் ஒன்றுப்பட்டு வீடுதோறும் தேசிய கொடிகள் ஏற்றினீர்கள்.

modi-announced-to-hoist-the-flag-in-house

அதுபோல் இந்த ஆண்டும் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள். அதேபோல் அமுத கலச யாத்திரை நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து மண், மரக்கன்றுகள் சேகரிக்கப்படும். அதனை கொண்டு வந்து போர்நினைவுச்சின்னம் அருகே அமுததோட்டம் உருவாக்கப்படும்.

நாட்டின் புனிதமான மண்ணைப் பற்றி உறுதிமொழி ஏற்கும் போது நீங்கள் அனைவரும் உங்கள் செல்ஃபிக்களை yuva.gov.in இல் பதிவேற்ற வேண்டும்." என்று கூறியுள்ளார்.