மோடி - அண்ணாமலையும் தான் நடிகர்கள்..நா இல்ல..! மன்சூர் அலி கான் அதிரடி!!
தமிழ்நாட்டை சீர்குலைத்து மதவெறிகாடாக ஆக்க வேண்டும் என அண்ணாமலை செயல்படுகிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மன்சூர் அலி கான் பேட்டி
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலி கான் பேசும் போது, அண்ணாமலையை நேரில் பார்த்தது இல்லை என குறிப்பிட்டு, ஐபிஎஸ் படித்தும் எந்த உத்தரவும் வாங்காமல் வீட்டின் முன்பு பெரிய கம்பம் நடுகிறார் என்று குற்றம்சாட்டினார். கலவரம் உண்டு பண்ணனும், மக்களை பிளவுபடுத்தனும் என்பதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டிய மன்சூர் அலி கான், தமிழ்நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்றும் மதவெறிகாடாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என சாடினார்.
அவர்களே ரவுடியை வெளியே கொண்டுவந்த நிலையில் தான், அவர் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றிவிட்டு அப்படி வைக்கிறார் என்ற அவர், அதற்குள்ளாகவே கேட் இடிந்தது, கவர்னர் மாளிகை இடிந்துவிட்டு என்று வட இந்தியா முழுவதும் பரபரப்பை கூட்டுறாங்க என்று சாடினார். 2 கோடி வேலை வாய்ப்பு தருவார்கள் என்று ,மோடி சொன்னதை சுட்டிக்காட்டி பேசிய மன்சூர் அலி கான், ஆனால் நிறைவேறியிருக்கிறதா? என்று வினவி, தமிழகம் வஞ்சிக்கப்படுவது கவலையளிக்கிறது என்றும் முதலில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உண்மையான இந்தியாவை உருவாக வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அவர், இது தான் தலையாய கோரிக்கை எனக் கூறி, தமிழகத்தில் சமூக நீதி காத்த தமிழகம் என்று சொல்வதற்கு முன்னாடி பீகாரில் அதனை நிதிஷ் குமார் அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள் என்றார் ஆனால் இப்போதும் ஒன்று ஆகவில்லை இந்த கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
கவர்னர் பதவி ஒன்றுமில்லாதது என்று கூறி, கவர்னர் மாளிகையில் உள்ள 100 ஏக்கரில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என கூறி, கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கையெழுத்து போடுவதை விட்டுவிட்டு அவர் விருப்பத்துக்கு செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.
மேலும், மோடி ஏழை தாயின் மகன்னு சொல்றாங்க ஆனா Dress ரூ.15 லட்சம், Watch ரூ.1 லட்சம், கண்ணாடி ரூ.10 லட்சம் போன்றவற்றை அணிகிறாரா? என்ற மன்சூர் அலி கான், உலகத்தில் இரண்டே நடிகர்கள் தான் அந்த கூறி, அது மோடியும் அண்ணாமலையும் தான் என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.