ஹோட்டலில் தூக்கில் தொங்கிய பிரபல மாடல் - என்ன நடந்தது?
பிரபல மாடல் அழகி ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அகன்ஷா மோகன்
மும்பயைச் சேர்ந்தவர் அகன்ஷா மோகன்(30). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். சில விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது வெளியான சியா திரைப்படத்தில் நடித்துள்ளார். அகன்ஷா மும்பை அந்தேரியில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர், வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தற்கொலை
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கியபடி இருந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதனையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், 'எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல.
யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.