மாநிலத்திற்காக கோரிக்கை - அரசியல் முழக்கம் அல்ல..!பிரதமர் இருக்கும் போதே முதல்வர் பேச்சு!

M K Stalin DMK Narendra Modi trichy
By Karthick Jan 02, 2024 08:31 AM GMT
Report

திருச்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மாநிலத்திற்காக கோரிக்கை வைப்பது அரசியல் முழக்கம் அல்ல என தெளிவப்படுத்தினார்.

முதல்வர் உரை

திருச்சி விமான நிலைய முனைய திறப்பு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், புதிய முனையத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வகையில் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமர்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

mk-stalin-mass-speech-in-trichy-in-front-of-modi

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பன்னாநாட்டு விமான நிலையமாகும் என சுட்டிக்காட்டி பேசிய அவர், திருச்சி உட்பட சென்னை, கோவை, மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய 3 ஆயிரத்து 118 கோடி செலவில் அரசு மற்றும் பட்டா நிலங்களை தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பேச வந்த முதல்வர் - மோடி மோடி என கோஷம்..! கையசைத்து சிக்னல் செய்த பிரதமர்..!

பேச வந்த முதல்வர் - மோடி மோடி என கோஷம்..! கையசைத்து சிக்னல் செய்த பிரதமர்..!

தொடர்ந்து பேசிய அவர், ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமின்றி பல நாட்டு சுற்றுலா பயணிகளும் ஆன்மீக பயணமாக வரும் சூழலில், மதுரை விமான நிலையத்தை பன்னாநாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை வைப்பது

கடந்த மாதம் சென்னை உட்பட தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அதனை இயற்கை பேரிடராக அறிவித்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கையாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

mk-stalin-mass-speech-in-trichy-in-front-of-modi

மேலும், கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுகளுக்குத்தான் உள்ளது என சுட்டிக்காட்டிய முதல்வர் முக ஸ்டாலின், மாநிலத்திற்காக கோரிக்கை வைப்பது அரசியல் முழக்கம் அல்ல என்றும் அரசின் கோரிக்கையை பிரதமர் நிறைவேற்றி தருவர் என்று நம்புவதாக கூறி தனது உரையை நிறைவு செய்தார்.