சகோதரிகளுக்கு பாலியல் வன்கொடுமை - கதறியும் விடாமல் இளைஞர்கள் கொடூரம்!

Sexual harassment Uttar Pradesh Crime
By Sumathi Mar 14, 2023 10:49 AM GMT
Report

சகோதரிகளை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேசம், பாதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது சகோதரிகள் அருகில் நடந்த திருவிழாவை பார்க்கச் சென்றுள்ளனர். அதன்பின் வீடு திரும்பியபோது 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்துள்ளனர்.

சகோதரிகளுக்கு பாலியல் வன்கொடுமை - கதறியும் விடாமல் இளைஞர்கள் கொடூரம்! | Minor Sisters Gang Raped By 8 Men In Uttar Pradesh

தொடர்ந்து ஆள் இல்லாத பகுதியில் இருவரையும் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் 2 பேரும் விட்டுவிடும் படி கதறியுள்ளனர். ஆனாலும் அந்த கும்பல் அவர்களை விடவில்லை. இதன் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் அவர்களை மீட்டு அந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

6 பேர் கைது

அதனையடுத்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் 6 பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் 22 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் தப்பித்த 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் சகோதரிகளிடம் அத்துமீறியதும், அவர்களது செல்போனை பறித்ததும் தெரியவந்தது.