தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது - அமைச்சர் சேகர் பாபு!

Tamil nadu P. K. Sekar Babu Viluppuram
By Jiyath Nov 17, 2023 05:18 AM GMT
Report

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர நினைப்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

தங்கத்தேர் வெள்ளோட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பழுது நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது - அமைச்சர் சேகர் பாபு! | Minister Sekar Babu Indictment Bjp Viluppuram

இதில் தமிழக சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து செய்தியாளராகளை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது "தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தமிழக அரசுக்கு 'டாஸ்மாக் மாடல் அரசு' என்ற பெயர் பொருத்தமா இருக்கும் - அண்ணாமலை!

தமிழக அரசுக்கு 'டாஸ்மாக் மாடல் அரசு' என்ற பெயர் பொருத்தமா இருக்கும் - அண்ணாமலை!

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அதன்படி ராமேஸ்வரம், சமயபுரம் மாரியம்மன், திருத்தணி முருகன் கோவில்களில் ஓடாமல் இருந்த தங்கத்தேர் பழுது நீக்கி, பக்தர்களின் நேர்த்திக் கடன் செலுத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது - அமைச்சர் சேகர் பாபு! | Minister Sekar Babu Indictment Bjp Viluppuram

அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என கூறுகிறார்கள். இது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. இது திராவிட மண். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சி அமையும் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.