பள்ளிகளில் குழந்தைகளுக்கு வலுக்கட்டாய போர் பயிற்சி - வெளியான ரஷியாவின் ரகசியம்!
ரஷிய நாட்டில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்
கடந்த ஒன்றரை வருடமாக ரஷியா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் நடந்து வருகிறது. போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ரஷியா, தனது நாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்கு அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது.
கண்டனம்
இந்நிலையில், இந்த பயிற்சிக்காக ரஷியா சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. மேலும், உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாக பயிற்சிக்காக மாணவர்கள் வர மறுத்தாலும், அரசாங்கம் வலுக்கட்டாயமாக பயிற்சிகளில் ஈடுபடுத்தி வருகிறது.
உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது. மேலும், குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.