பதிரானாவால் தான் தோற்றோம்; தோனி இப்படி சிக்க வச்சிட்டாரு - ஹர்திக் ஆதங்கம்!
தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
MI vs CSK
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.
இதில், சிஎஸ்கே அணியின் 206 ரன்கள் என்ற இலக்கை மும்பை துரத்தி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதிரானா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பந்து வீசி எங்களை தோற்கடித்து விட்டார்கள். இந்த ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் பதிரானா தான்.
ஹர்திக் கருத்து
வான்கடே மைதானத்தில் ஒரு புறம் மட்டும் பவுண்டரி கொஞ்சம் தூரமாக இருக்கும். அதனை சிஎஸ்கே சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஸ்டெம்புக்கு பின் இருக்கும் நபர் அனைத்தையும் பார்த்துக் கொண்டு திட்டத்தை தீட்டி எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவிட்டார்.
இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சை விட வேகப்பந்துவீச்சாளர்களை அடிப்பது தான் சிரமமாக இருந்தது.
அடுத்த நான்கு போட்டிகளை மும்பைக்கு வெளியே விளையாட போகிறோம். நாங்கள் அறிவுப்பூர்வமாக நடந்து கொண்டால் நிச்சயம் எங்களுடைய இலக்கை எட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.