பெண்கள் மட்டும்தான் இங்க; இந்த கிராமத்தில் ஆன்கள் நுழைவதற்கே தடை - எப்படி குழந்தைகள்?
பெண்களால் உருவாக்கப்பட்ட ஆண்கள் தடை செய்யப்பட்ட கிராமம் ஒன்று உள்ளது.
பெண்கள் மட்டும்தான்..
கென்யாவில் உமோஜா என்ற கிராமம் உள்ளது. பெண்கள் மட்டுமே இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள், நடத்துகிறார்கள். இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.
இது 30 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 1990 களில், பிரிட்டிஷ் வீரர்கள் இந்த இனப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
எப்படி குழந்தைகள்?
அவர்களது கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துவிட்டனர். அப்படி ஒரு குறிப்பிட்ட அளவிலான பெண்களை தங்களின் குடும்பங்களும் கணவன்மார்களும் ஒதுக்கி வைத்துள்ளனர். அப்போது ரெபெக்கா லோலோசோலி என்ற பெண்ணும் இதே சித்திரவதையை அனுபவித்துள்ளார்.
யாரும் அவர் சொல்வதைக் கேட்காததால், அவர் சுமார் 15 பெண்களுடன் உமோஜா என்ற கிராமத்தை நிறுவியுள்ளார். இந்த கிராமத்தில் தற்போது 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பெண்கள் பாரம்பரிய மணி மாலைகளை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
அவர்கள் உடல் உறவுக்காக கிராமத்தை விட்டு வெளியேறி, விரும்பிய ஆணுடன் உறவு கொள்கிறார்கள். அதன் மூலம் குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.