பொது சிவில் சட்டம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது - மேகாலயா முதல்வர் பேட்டி!
பிரதமர் மோடி அறிவித்த பொது சிவில் சட்டம் இந்திய கலாச்சாரத்திற்கே எதிரானது என்று மேகாலயா முதல்வர் கூறியுள்ளார்.
மோடி
போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்" துன்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த பொது சிவில் சட்டம் குறித்து பல கட்சியினர் ஆலோசனை நடத்தினர். பின்னர், இந்த சட்டம் எதிரானது, இதற்கான அவசியம் தற்போது இல்லை என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேகாலயா முதல்வர்
இந்நிலையில், மேகாலயாவின் முதல்வர் கான்ராட் சங்மா இந்த சட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "வடகிழக்கு ஒரு தனித்தவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருங்க விரும்புகிறோம்.
உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம், அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்திய தத்துவத்திற்கு எதிரானது. இருப்பினும் சட்ட வரைவின் உண்மையான விஷயங்களை பார்க்காமல் அது குறித்த விவரங்களைக் கூறுவது கடினம்" என்று கூறியுள்ளார்.