மருத்துவக் காப்பீடு: முக்கிய தகவல் - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!
நோயாளிகளுக்கு உரிய மருத்துவக் காப்பீடுத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீடு
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்சந்திர ஜோஹி என்பவர் அவரது மனைவியை உடல்நலம் சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக 2016 ஆண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஒரு நாள் மட்டும் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சைக்கு 44,500 செலவாகியுள்ளது. அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்த நிலையில், காப்பீட்டு நிறுவனத்தில் சிகிச்சைக்கு செலவை சமர்பித்து தொகையை கோரியுள்ளார். அந்த காப்பீட்டு நிறுவனமோ, அவரது மனைவியை 24 மணி நேரம் மருத்துவமனையில் வைக்கப்படவில்லை என்பதால் நிறுவன விதிப்படி வழங்க முடியாது என்று கூறியது.
முக்கிய தகவல்
இதை எதிர்த்து 2017-ம் ஆண்டு வதோதரா நுகர்வோர் விவகார தீர்வு ஆனயத்தில் வழக்குத் தொடுத்தார். விசாரித்த நுகர்வோர் ஆணையம் , ‘தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இருக்கிறோம். இப்போது குறைந்த நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுகின்றன’.
இதனால் 24 மணி நேரத்துக்குள் சிகிச்சை முடித்து வீடு திரும்பினாலும் உரிய காப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ரமேஷ்சந்திர ஜோஹிக்கு உரிய காப்பீடு தொகையோடு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.3000, வழக்கு செலவுக்கு ரூ.2000 சேர்த்து வழங்கபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.