மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடி - அங்கேயே இருவருக்கும் அரசு பணி!

Chennai Ma. Subramanian Marriage Viral Photos
By Sumathi Oct 29, 2022 05:05 AM GMT
Report

 மன நல காப்பகத்தில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநல காப்பகம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையினை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும் வேலூரை சேர்ந்த 32 வயதான தீபாவும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு அரசு மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கினர்.

மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடி - அங்கேயே இருவருக்கும் அரசு பணி! | Married Couple In Mental Asylum Chennai

தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள care centre -ல் தங்கி பணி புரிந்து வருகின்றனர். தந்தையினை இழந்து மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்து முதல் பார்வையிலே மகேந்திரனுக்கு தீபாவின் மேல் காதல் வந்துள்ளது.

திருமணம்

முதல் சந்திப்பிலேயே மகேந்திரன் திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்க, சற்றே தயங்கிய தீபா சிறிது காலத்திற்குப் பிறகு மகேந்திரனிம் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார். தந்தையினை இழந்த பிரிவினால் பமனநோய்க்கு ஆளான தனக்கு மகேந்திரனே மருந்தாக கிடைத்துள்ளதாக தீபா கூறியுள்ளார்.

மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடி - அங்கேயே இருவருக்கும் அரசு பணி! | Married Couple In Mental Asylum Chennai

இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்.

அரசு வேலை

இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் வந்து மணமக்களை வாழ்த்தினர். மேலும், மனநல காப்பகத்திலேயே ரூ.15 ஆயிரம் மாத சம்பளத்தில் 'வார்டு மேலாளர்' பணிகளை இருவருக்கும் வழங்கி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருவரையும் வாழ்த்தினார்.

தொடர்ந்து, மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினர்.