ரூ.225 கோடிக்கு மேல் சொத்து ; ஏழைகளுக்கு வழங்கிய இளம்பெண் - என்ன காரணம்?
இளம்பெண் ஒருவர் தனது ரூ.225 கோடி சொத்தை ஏழைகளுக்கு வழங்கியுள்ளார்.
மர்லின் ஏங்கல்கார்ன்
ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான பி.ஏ.எஸ்.எப். நிறுவனத்தின் வாரிசுகளில் ஒருவர் மர்லின் ஏங்கல்கார்ன் (31). பத்திரிக்கையாளராக இருக்கும் இவருக்கு சமூக தொண்டு ஆர்வமும் அதிகம்.
மர்லினுக்கு வாரிசு உரிமையின் அடிப்படையில் ரூ.225 கோடிக்கு மேல் சொத்துகள் கிடைத்துள்ளது. ஆனால் சொத்துக்கள் மீது கொஞ்சமும் நாட்டமில்லாத மார்லின், அதை பலருக்கும் பகிர்ந்து கொடுக்க முடிவு செய்துள்ளார்.
கொடை வழங்குகிறார்
அதற்காக 'மறுபகிர்வு கவுன்சில்' என்ற திட்ட அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆஸ்திரிய குடிமக்கள் 50 பேருக்கு தொகையை பகிர்ந்து வழங்குகிறார்.
5,000 பேரிடம் இருந்து இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவர்களில் 50 பேரை தேர்வு செய்து வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை கொடை வழங்குகிறார்.