ஏன் அதிகளவில் இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சர்ய காரணம்!
இந்திய மாணவர்கள் ஏன் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.
மருத்துவ படிப்பு
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.
எனவே, ஈரானில் இருந்து அவர்கள் இந்தியா திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 90 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈரானின் உர்மியா மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பினர்.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 20,00 - 25,000 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2,050 இந்திய மாணவர்கள் ஈரானில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
மாணவர்கள் தேர்வு
ஈரான் நேரடி MBBS பட்டத்தை வழங்கவில்லை என்றாலும், அது இந்தியாவில் MBBS-க்கு சமமானதாகக் கருதப்படும் மருத்துவ முனைவர் (MD) பட்டத்தை வழங்குகிறது. இங்குள்ள பெரும்பாலான மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்தால் (NMC) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட ஈரானில் மருத்துவக் கல்விக்கான செலவு மிகக் குறைவு. விடுதி மற்றும் கல்லூரி கட்டணங்கள் உட்பட தோராயமாக ரூ.18-25 லட்சம் வரை செலவாகும். இதனால்தான் இந்திய மாணவர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாக மாறியுள்ளது.
இருப்பினும், ஈரானில் சேர்க்கை பெற, இந்திய மாணவர்கள் இந்தியாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.