மணிப்பூரில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்.. பழங்குடியினர் 3 பேர் படுகொலை!

Death Manipur
By Vinothini Sep 13, 2023 04:47 AM GMT
Report

பழங்குடியினதவறை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலவரம்

மணிப்பூரில் அதிகமாக வாழும் குக்கி இனக்குழு மக்களுக்கும், தாழ்வான நிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகமான மெய்த்தி இனத்தவருக்கும் இடையே மே 3 அன்று வன்முறை வெடித்தது. பொருளாதார நன்மைகள் மற்றும் மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு காரணமாக போராட்டம் நடத்தி அது கலவரமாக வெடித்தது.

manipur-violence-3-people-dead

இதில் பலர் கொல்லப்பட்டனர், மேலும் சிலர் இடம்பெயர்ந்தனர். இந்த கலவரம் காரணமாக ஊரடங்கு போடப்பட்டது, மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது.

இந்த கலவரம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், இன்னுமும் கூட அங்கு பதற்றம் முழுமையாக நீங்கியபாடில்லை. மாறாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

படுகொலை

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் பல்லேல் நகரில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நேற்று மீண்டும் நேற்று அங்குள்ள கங்போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் தடைசெய்யப்பட்ட ஆயுத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

manipur-violence-3-people-dead

இம்பால் மேற்கு மற்றும் கங்போக்கி மாவட்டங்களின் எல்லை பகுதியில் இருக்கும் இரெங் மற்றும் கரம் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள காங்குய் பகுதியில் ஆயுத குப்பிகளை சேர்ந்தவர்கள் கிராம மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் குகி-சோ என்ற பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.