உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வெடித்த மெத்தை - பரிதாபமாக உயிரிழந்த நபர்!

India Death
By Vinothini Jul 04, 2023 08:46 AM GMT
Report

 மேகாலயாவில் ஒருவர் தூங்கி கொண்டிருக்கும்போது திடீரென மெத்தை வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

விபத்து

மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஸ்மிட் நகரில் பின்சுக்லாங் என்பவர் வாழ்ந்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இவரது வீட்டில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதற்றத்தில் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.

man-who-slept-in-electric-bed-dead

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு பின்சுக்லாங் இறந்து கிடந்துள்ளார்.

விசாரணை

இந்நிலையில், இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இவர் மின்சார மெத்தை வெடித்து அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அந்த மெத்தை தேவைக்கு அதிகமாக மின்சார மெத்தை சார்ஜ் செய்யப்பட்டதால் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

man-who-slept-in-electric-bed-dead

மேலும், உயிரிழந்த நபர் குறித்து இவரது குடும்பத்தினர் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவர் ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.