ரயில் படிக்கட்டில் பயணித்த இளைஞர்; தவறி விழுந்து பரிதாப பலி

Chennai Indian Railways
By Karthikraja Oct 03, 2024 04:30 PM GMT
Report

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ரயில் படியில் பயணம்

கடலூர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(24). நேற்று ஊருக்கு செல்வதற்காக வைகை எக்ஸ்பிரசில் பயணித்துள்ளார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் அமர்ந்து பயணித்துள்ளார். 

vaigai express

அப்போது, சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே அவரது கால் நடைமேடையில் இடித்ததில் தவறி நடைமேடையில் விழுந்துள்ளார். 

வேலை கிடைக்காத ஆத்திரம்; நடத்துநரை கத்தியால் குத்திய இளைஞர் - பதற வைக்கும் வீடியோ

வேலை கிடைக்காத ஆத்திரம்; நடத்துநரை கத்தியால் குத்திய இளைஞர் - பதற வைக்கும் வீடியோ

பரிதாப பலி

கீழே விழுந்ததில் அவர் 150 மீட்டர் தூரத்திற்கு நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டு ரயிலில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

vaigai express

ரயிலில் இது போன்று ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே போலீசார் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர்.