வேலை கிடைக்காத ஆத்திரம்; நடத்துநரை கத்தியால் குத்திய இளைஞர் - பதற வைக்கும் வீடியோ
வேலை கிடைக்காத ஆத்திரத்தில் நடத்துநரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு பேருந்து
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நேற்று மாலை வைட்ஃபீல்டு என்ற பகுதியில் இருந்து நகரின் மையப் பகுதிக்கு செல்லும் பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஹரிஷ் என்ற நபர் படியில் நின்றவாறு பயணித்து வந்தார்.
படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என நடத்துநர் யோகேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நடத்துநர் யோகேஷை குத்தியுள்ளார்.
விசாரணை
இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். ஆத்திரம் குறையாத ஹரிஷ் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை தாக்கியதோடு முன்பக்க கண்ணாடியையும் உடைத்துள்ளார்.
சுதாரித்த பேருந்து ஓட்டுநர் ஹரிஷை பேருந்து உள்ளே வைத்து பூட்டி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். உடனே விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிஷை கைது செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட நடத்துநர் ,மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Shocked to hear about the terrorising act of a passenger named Harsha Sinha stabbing a BMTC bus conductor during daylight hours in Bengaluru
— Karnataka Weather (@Bnglrweatherman) October 2, 2024
Request @BlrCityPolice to book & arrest the assailant under terrorism charges for hijacking the bus, stabbing the conductor, threatening… pic.twitter.com/SXHpvwGEPR
ஹரிஷிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஹரிஷ் சின்ஹா சின்ஹா(25) ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், சில மாதங்களுக்கு தான் வேலை பார்த்த பிபிஓ நிறுவனத்திலிருந்து இருந்து கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வேலையில் நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். பல நாட்களாக வேலை தேடி அலைந்துள்ள நிலையில், வேலை கிடைக்காத ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.