என் கடைசி ஆசை, என்னை அவளோடு சேர்த்து புதைச்சுடுங்க.. அக்கா மகளை கொன்ற தாய்மாமன் தற்கொலை!

Attempted Murder Death Tirupathur
By Vinothini Oct 17, 2023 07:24 AM GMT
Report

 அக்கா மகளை கொன்ற தாய்மாமன் தற்கொலை செய்துகொண்டார்.

கொலை

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 35 வயதான இவர் புகைப்படக் கலைஞராகவும், ஓட்டுநராகவும் வேலை செய்துவந்தார். இவர் தன்னை விட 17 வயது சிறிய பெண்ணான தனது அக்கா மகளை ஒருதலையாக காதலித்து வந்தார்.

man-who-killed-sisters-daughter-commited-suicide

18 வயதான இவரது அக்கா மகள் கல்லூரியில் படித்து வந்துள்ளார். வயது காரணமாக மற்றும் சரண்ராஜ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கும் உள்ளது, இதனால் "மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது" என்று அவரது அக்கா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அக்காள் மகளைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

மறுப்பு தெரிவித்த 18 வயது அக்கா மகள் - விரக்தியில் 35 வயது தாய்மாமான் வெறிச்செயல்!

மறுப்பு தெரிவித்த 18 வயது அக்கா மகள் - விரக்தியில் 35 வயது தாய்மாமான் வெறிச்செயல்!

தற்கொலை

இந்நிலையில், வழக்கு பதிவுசெய்த நாட்றம்பள்ளி போலீஸார், தப்பி ஓடிய சரண்ராஜைத் தீவிரமாகத் தேடியபோது, நேற்று காலை டீக்கடை ஒன்றில் அவர் பிடிபட்டார். அப்பொழுது அவர் குடித்ததாக கூறியதால் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

man-who-killed-sisters-daughter-commited-suicide

அப்பொழுது நேற்று இரவு இவர் தற்கொலை செய்துகொண்டார். மேலும், விசாரணையில் சரண்ராஜ், "நானும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். என் கடைசி ஆசை, அவள் உடலோடு சேர்த்து, என்னையும் புதைத்துவிடுங்கள்" என்று உறவினர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.