பப் பழக்கம்; கேர்ள் பிரண்டை சீரழிக்க முயன்ற இளைஞர் - சிக்கிய பெண்
இளைஞர் தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரண்ட இளம்பெண்
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ஷாகின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஷாகினும், அந்த பெண்ணும் அடிக்கடி பப்புகளுக்கு சென்று மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அறையெடுத்து தங்கியிருந்தனர். அப்போது, ஷாகின் திடீரென தனது நண்பர்களுக்கு வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, தானும் தனது கேர்ள் பிரண்டும் நெருக்கமாக இருப்பதை வீடியோவில் காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், உடனே குளியலறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். மேலும், தனது மொபைல் போன் மூலம் தோழிகளுக்கும், காவல்துறைக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளம் பெண்ணை மீட்டனர். தற்போது போலீஸார் ஷாகினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.