தன் காதலுக்காக 4 மாதம் சைக்கிளில் பயணம் செய்த இந்தியர் - நெகிழவைக்கும் காதல் கதை!
இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது காதலுக்காக பல நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து காதலை அடைந்த கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காதல்
சுவீடன் நாட்டை சேர்ந்த பெண் சார்லோட் வான் ஷெட்வின் என்பவர், தனது ஓவிய கல்லூரியில் பயிலும்போது இந்திய ஓவியர் ஒருவர் வரைந்த ஓவித்ததை கண்டு வியந்துள்ளார்.
அந்த ஓவியத்தை வரைந்தவரை பார்க்க வேண்டும் என ஆவலில் இருந்துள்ளார்.
பின்னர், 1975- ம் ஆண்டு அந்த ஓவியத்தின் சொந்தக்காரரான மகாந்தியாவை டெல்லியில் சந்தித்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து மகாந்தியா அவரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்பொழுது அவர் புடவையில் வந்தது இன்னும் என்னால் மறக்கமுடியாது என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர், பிறகு சார்லோட் தனது கணவரை சுவீடனிற்கு சென்றுவிடலாம் என்று அழைத்துள்ளார், அனால் அவர் தனது படிப்பை முடித்து விட்டு வருவதாக கூறியுள்ளார்.
நீண்ட பயணம்
இதனை தொடர்ந்து, அவர் தனது படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடம் கழித்து செல்ல முடிவு எடுத்துள்ளார்.
அனால் அவரிடம் போதுமான பணம் இல்லாததால் தனது சைக்கிளை எடுத்து கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி என சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளார்.
மேலும், அவர் செல்லும் வழியில் அவரது சைக்கிள் பலமுறை சேதமடைந்துள்ளது, பல இடங்களில் உணவு இல்லாமலும் சிரமப்பட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் செல்லும் வழியில் சிலர் உணவளித்து உதவியதாகவும், சில இடங்களில் படம் வரைந்து அதன் மூலம் சம்பாரித்து மேலும் சைக்கிளில் தினமும் 70 கி.மீ என பயணம் செய்து சுவீடனில் உள்ள தனது காதலியை அடைந்ததாக கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.
இவர்களின் காதல் கதையை ஒருவர் இணையத்தில் வெளியிட்டு அது தற்போது வைரலாகி வருகிறது.