கோவிலில் யானை சிலைக்கு கீழ் சிக்கிக்கொண்ட இளைஞர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
கோவிலில் யானை சிலைக்கு கீழ் சிக்கிக்கொண்ட இளைஞரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யானை சிலைக்கு கீழ் சிக்கிக்கொண்ட இளைஞர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அங்கிருந்த யானை சிலையின் நான்கு கால்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் நுழைய முயற்சி செய்தார்.
அப்போது, சிலைக்கு கீழே நுழைந்த அவர் உடல் பகுதி மாட்டிக்கொண்டது. இதனால், அவரால் வெளியே வர முயற்சித்தபோது அவரால் வெளியே வர முடியவில்லை. இதனையடுத்து, அங்கிருந்த பக்தர்கள் பலர் அவரை இழுத்தும் அவரால் வெளியே வர முடியவில்லை.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆபத்து தெரியாமல், ஏன் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறீர்கள் என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.